Monday, August 31, 2009

போதும் இந்நிலை‏

http://photos.tamilwin.info/GalleryThumbnails.aspx?gallery=175756&page=1


மனிதப்பிறவி எடுத்ததிற்கோர்..
மாதவம் வேண்டுமென்பர்..

மனிதனை மனித மிருகம்
இல்லை இல்லை
மிருகத்தனத்தைவிட வேறு
எது கொடியதோ..

அந்தக் கொடியத்தனம் மிகுந்த..
இரத்த வெறி பிடித்தலைந்த அந்த..
காட்டுமிராண்டித்தனம்..
கொண்ட கயவர்களின்..அட்டூழியங்களை..

இத்தனையும்..
காட்சிகளாகக் காணத்தான்
மனிதப்பிறவியா..?

இன்று எம்மக்கள்
பட்ட துன்பம்..படுகின்ற துயரம்..
இத்தனையும் கண்டும் கண்கள் இறந்தும்
இறக்கவில்லை..

மனம் கலங்கியும்..
கல்லாகவில்லை..
காலம் தான் மாறுமோ..

எம்மக்களின் பாதைதான் மாறாதோ..
இந்நிலைதான் முடியாதோ..இறைவா.
இருகரம் கூப்பி இன்னும் உன்னை நம்பி..
இருவிழி அழுது கேட்கிறேன்..

போதும் இந்நிலை..போதும்..போதும்..
தமிழரைக் காக்க கருணையுள்ளம் கொண்டு..
தரையிறங்கி வருவாயா..?

Wednesday, April 29, 2009

தியாகத் தீபமே..மெழுகாய் உருகாதே..



நித்திய தீர்வு பெற..
சத்தியம் செய்து..
பட்டினி கிடந்து
உத்தமன் உன் உயிரை
பணயம் வைத்து

இன்று எத்தனை நாளாகிற்று..?
எவராவது கேட்டார்களா..?
இன்னும் இருட்டறைக்குள் உலக வல்லரசுகள்..
இது வரையில் யாருமே கண்டு கொள்ளவில்லையே

எங்கேஉன்னை இழந்துவிடப்போகிறோமோ என
எத்தனை இலட்சக்கணக்கான தமிழர்கள்...
அத்தனை மக்களும் உன்னை இழக்கவிரும்பவில்லை..
தீலிபன் அண்ணா இறந்த துயர் இன்னும் மறக்கவில்லை..

மேலும் துயரை தந்திடாதே பரமேஸ்வரா..
எழுந்து நீயும் நடைபோடு..
துணிந்து நீயும் போராடு..
மடிந்து போகும் எம்மினத்தைக்காக்க..

மடிந்து நீயும் போவதால்..
தீர்ந்து போகும் பிரச்சனையல்ல..இது..
எழுந்து நீயும் வரவேண்டும்..
கண்ணீரோடு நாமிருக்கிறோம்..

தண்ணீர் அருந்திவிடு..
தமிழீழம் நெருங்கும் நேரத்தில்..
தவித்து நீயும் மடியவேண்டாம்..

எழுந்து வா சகோதரனே..
எழுந்து வா...
தியாகத் தீபமே..மெழுகாய் உருகாதே..
சுடராய் எழுந்து வா.

Tuesday, April 21, 2009

கண்களில் வழிகின்றது உதிரம்.



கண்களில் வழிகின்றது உதிரம்.

தீராத கொடுந் துயரம்..

Monday, April 20, 2009

தீக்குளிக்க யாரும் போகாதீங்க..‏



தீக்குளிக்க யாரும் போகாதீங்க..
தீயவனுக்கு மனிதநேயம் கிடையாதுங்க..
தீ குளிப்பதால் தீர்வு கிடைக்காதுங்க..

தீமைகளை தட்டிக்கேளுங்க..
தீர்வு கிடைக்கும் வரை குரல் எழுப்புங்க..
தீயவன் எம்மினத்தை அழிக்கின்றான்..

தீராத கொடும் இனமழிப்பைத் தொடர்கின்றான்..
தீக்குளித்து உங்கள் உடல் கருகுவதால்...
தீயவன் காதுகளுக்கு தேனான செய்தியாகின்றதுங்க..

தீயில் எம்மினம் கருகியது போதுமங்க..
தீவினை அகற்ற குரல் ஓங்கி எழுப்புவோமுங்க..
தீந்தமிழ் நிலைபெற ஓயாது பாடுபடுவோமுங்க..

தீக்குளிக்க யாரும் போகாதீங்க..

Friday, April 17, 2009

Ottawa Tamils Protest for Freedom - April 2009



கருணை உள்ளங்களே..
கொஞ்சம் கதைவைத் திறவுங்களேன்..
மிச்சமுள்ள தமிழினத்தைக்
காப்பாற்ற..

எங்கள் கதையைக் கேளுங்களேன்..

Thursday, April 16, 2009

கொடுமை..



மரம் நாட்ட.
மண் தோண்ட..
பிண வாடை..

தோண்டும் இடம் எல்லாம்..
மனித உடல்கள்...
மரம் நாட்டத் தேவையில்லை..
மனிதம் புதைக்கப் பட்ட பொழுது..
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

ஏப்பம்.


மண்ணிலிருந்து
விண்நோக்கிப் பறந்து
அங்கிருந்து குறி பார்த்து
நேராக வந்து

கொத்தித் திரியும்
கோழிக்குஞ்சை
கெளவிக்கொண்டு
போகும் கழுகு போல்..

ஏதுமறியா அப்பாவி
மழலைகள்கூட
கழுகுகள் பசிக்கு இரையாகி
காலத்தை முடிப்பது
கல்லறையில் எழுதப்படவில்லை
கண்ணீரால் மட்டும் எழுதப்படுகின்றது.

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

Wednesday, April 15, 2009

மனிதா..மனிதா.

மனிதா மனிதா
இனியும் அழுதல் முறையா
உதிரம் சிந்தி
கதறும் தமிழினம்..

தவிக்கும் நிலையை
கொதிக்கும் மனங்கள்
மாற்றியமைப்போம்..

தமிழினத்தின் இரத்த வாடையை
சுவாசிக்கும் பித்துப்பிடித்த
பிக்குக்கூட்ட சாதிகளுக்கு..

ஒட்டுமொத்த
புலம் வாழ் தமிழர்கள்
கட்டியெழுப்பும்..
தர்மத்திற்கு வழி கண்டு
விடைகொடுப்போம்.

மனிதா மனிதா
இனியும் அழுதால்
முறையா..?

ஏன் இந்தக்கொடுமை...???


அள்ளி அள்ளிக் கொடுத்த
கரங்கள்..இன்று..
அடுத்தவன் கஞ்சிக்கு
அகதிகளாய் அநாதைகளாய்..
காணும் காட்சி..
கண்களில் கசிகிறதே..

பிஞ்சு நெஞ்சங்கள்
கொதிக்கும் மணலில்
தவிக்கும் தவிப்புக்கூட
ஆதிக்கம் செலுத்துபவன்
கண்ணுக்கு விருந்தாகயிருக்கின்றதே..

மனிதநேயம் மறைந்து விட்டதா..?
தமிழினம் படும் நிலை
கண்டும் காணாதது போல
கண்மூடித்தனமாக இன்னும்
அயல் நாட்டார் தூங்குவது போல்
நடிப்பதும் ஏனோ..???

வீதியிலே உறங்கவும்
பாதியிலே வாழ்வை
முடிக்கவும் தானா..
இவர்கள் தலைவிதி..?
நாதியற்றுப் போயிருக்கும்
உறவுகளை காப்பாற்ற
நல்ல மனம் ஒன்றாவது உதவுமா..?

Tuesday, March 17, 2009

ஆழ்ந்த அநுதாபங்கள்..‏(குமாரவிநாயகம்.)


உருவத்தில் சிறியவராய்..
உள்ளத்தில் மிகப் பெரியவராய்..
வாழ்ந்த தேசப்பற்றாளர்
அமரர் தி: குமாரநாயகம் அவர்களுக்கு..

வாழ்த்துரை வடிக்க
வரம் வேண்டும்
என நினைக்க..

நிரந்தரமாய் நீ வரம் கேட்டு
நின்மதியாய் போனதென்ன..?

நீளும் எம்மின அழிவை
நினைந்தே நீயூம்..
தாங்காத துயரத்தில்..
நோய் வந்து வாட்டி..
விண்ணுலகம் போனாயோ..

அமைதியின் சொரூபமாய்..
அணையாத ஜோதியாய்..
அனைத்து தமிழ் நிகழ்விலும்..
சுடராய் ஒளி தந்தவரே..

இன்று எம்மை
இருளாக்கி நீ போனதென்ன..?

மாபெரும் சபை நடுவே நீ
மனிநேயத்தோடு மக்களுக்காக தொண்டாற்றியபடியாலோ..
உன் இறப்புச் செய்தியும் மாபெரும்
மக்கள் கூட்டத்தில் வைத்தே
அறிவிக்கப்பட்டதோ...

அதிலும் ஒரு பெருமைதான்..

உயிர்பலிகொடுத்த தாயகத்து மக்களுக்காய்..
கொடி பிடித்தோம்...
அதே துயரத்தோடு உன் பிரிவுக்கும்..
வருத்ததுடன் செவி மடுத்தோம்..

இறந்தாலும் வாழும் மனிதர்களில்
குமரா நீயும் ஒருவன்..

உன்னைப்பிரிந்து
துயரத்தில் வாடும் அன்பு மகேஸ் அக்கா மற்றும்
உற்றார் உறவினர்களுக்கு
வன்கூவர் மக்கள் சார்பில்
ஆழ்ந்த அநுதாபங்களும் ஆறுதல்கள்
வேண்டி இறைபிரார்த்தனைகளும்.


(வன்கூவர் துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் 15.03.09 அன்று என்னால் வாசிக்கப்பட்டது. )

கண்ணீர் அஞ்சலி.‏




குருதி குடிக்கும் அடங்கா அசுரனின்
அதிரடித் தாக்குதலால்
ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்கள்..
அன்றாடம் தம் உயிர்களை
தணல் தெறிக்கும் எறிகணைக்
குண்டுகளுக்கு இரையாகி விடுகின்றனரே..

தினம் வதைப்பட்டு
பிணக்குவியலில்
கூடாரமிட்டு
கூச்சலிட்டு அழக்கூட முடியாத
எமமினம் அழிகப்பட்டு
அவதியுறும் நிலை மாற

எரியும் உடலின் சாம்பலில் இருந்து
மலரும் தமிழீழம் என
உறுதிகொண்டு மடியும்
அந்த அப்பாவித்தமிழர்களின்
இன்னல்கள் வெகுவிரைவில்
துடைக்கப்பட்டு..

கண்களையும் காதுகளையும்..
பொத்திக் கொண்டு
எம்மினமழிவதை தடுக்காமல்..
ஏதேதோ நொண்டிச் சாட்டுச் சொல்லும்..
அவர்களைப் போல கருணையுள்ளம் படைத்த
கடவுளே கல்லாய் நாம் வழிபட்டதனாலோ
கல் மனதாய் விழி திறக்காதிருக்கின்றாய்..?

அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட
அன்பான எம் தமிழ் உறவுகள்
அனைவருக்கும் அவர்கள் உயிர்ககளைப்பிரிந்து வாழும்..
ஒவ்வொரு உறவுகளுக்கும்
இங்கிருந்து நாம் பிரார்த்தனையும்
ஆழ்ந்த அநுதாபங்களையும்
வார்ததைகளை
மட்டும் தான் வார்க்க முடியும்.

(வன்கூவர் துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் 15.03.09 அன்று என்னால் வாசிக்கப்பட்டது.)

Monday, February 23, 2009

தீராத கொடுமை தீருமா...?





தீராத கொடுமையை

தீர்த்துவைக்க யாருமே இல்லையா


ஆயிரமாயிரம் அப்பாவிகள்

அன்றாடம் அழிகின்றனரே..

ஆண்டவா இதற்கு ஒரு தீர்ப்பில்லையா..


மெலிந்த உடலும்..

கசிந்த மனமும்..

குருதி வடியும் கண்ணீரும்..

பதுங்கு குழிகூட

பாதுகாப்பு இன்றி


வேதனையின் விளிம்பில்

வெந்து மடியும்

எம் மினம்..


மனித வாழ்க்கை இல்லாது இருந்தும்

கால் நடையாக வாழத்தனிலும்

ஒரு சுதந்திரம் கூடஇல்லையே..


எம் தமிழனப் படுகொலைகள்

உலகக் கண்களுக்கு மட்டும் ஏன்

இருளாகவே இருக்கின்றதே...


நித்திம் நித்தம் சாவை எதிர் நோக்கி

நிர்மூலமாகும் எம் மக்களுக்கு

நீதி தேவதை கண்திறக்காதோ..


தீராத கொடுமையை

தீர்த்து வைக்க யாருமே இல்லையா..?

தீயில் வெந்து துடிக்கும் அப்பாவிகளுக்கு..நல்ல

தீர்ப்பு வழங்க எவருமே வரமாட்டார்களா..?

Wednesday, February 11, 2009

முடிவில்லா தொடர் நிலை










விட்டுத்துரத்தும் குண்டு மழைக்குள்..
பட்டுப்போன மரமாய்
பகல் இரவாக பதுங்குவதற்கு
குழியுமின்றி...

விழிகளிரண்டில்
வழிந்தோடும்
கண்ணீரை துடைக்க கரமும் இன்றி..

வாழ்வு முடிந்து விட்டது என ஏங்க..
முடிந்த இடத்தில் மீண்டும் ஓர் செல் விழ..
விழ விழ எழ முடிந்தும் முடியாதவர்களாய்..
வாழ்வின் விரக்தியில்

முடிந்து கொண்டிருக்கும்..சொந்தங்களுக்கு..
உதவிக்கரம் நீட்டும் என நம்பியிருந்த
அயல் நாடும்..
அநியாயம் இழைக்கின்றதே.

Thursday, January 29, 2009

தியாகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்.


ஈழத் தமிழருக்காய்
உன் உயிரை மாய்த்த
சகோதரனே...
உன் துணிச்சலான வீரச்செயலை
நினைத்து கண்ணீரோடு பெருமைப்படுகின்றோம்..


உன்னைப்பெற்றவளும் தமிழன்னை..
அந்த தொப்புக்குள்கொடி உறவை நீ
உலகிற்கிற்கு உணர்த்திச் சென்றுள்ளாய்..
இன்னுமொரு தியாகத்தீபம் திலீபனை
உன் வடிவில் காண்கின்றோம்..முத்துக்குமாரா..
உன் இறப்பு..
ஈழத் தமிழருக்காக குரல் கொடுப்போரைவிடுத்து..
கண்டும் காணாதது போல இருக்கும்....
அரசியல் வாதிகளுக்கு வேண்டுமானால்
மிகச் சாதாரணமாகயிருக்கலாம்..


உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழருக்கும்..
உன் இழப்பால் இன்னும் அதிகமான தமிழர்களை
இழந்த உணர்வுதான். என்றோ ஒரு நாள் சரித்திரம்...
சொல்லும் என்றில்லை. இன்றே உன் சரித்திரம்..
உலகத்து தமிழ் மக்கள் மத்தியில் படைக்கப்படுகின்றது..


நீ காட்டிய வழியை ஏற்று இனியும் எந்த உறவும்...
தீயில் கருகி உடலை மாய்க்க வேண்டாம்..
உன் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் வாழவேண்டும்..
அதுவே அனைத்து அரசாங்கத்தையும் விழிக்கச்செய்யும்.
ஒரு தீக்குச்சியால் உன் உடலை மாய்த்துக்கொண்டாய்..
ஒரு பேனாவால் பல உயிர்களை இனங்காட்டிக்கொடுத்தாய்..
நீ கொழுத்தியது உன் உடலை அல்ல
பல முகமூடி மனிதர்களையும் சேர்த்துக் கொழுத்திவிட்டாய்..
திருந்துவார்களா திரும்பிப் பார்ப்பார்களா...
இருந்தும் உன் இறப்பின் பின்னால்
இன்னும் நாமும் உயிரோடுதான்...
இருக்கும் வரை உரிமைக்காப் போராடுவோம்..
வாழ்க முத்துக்குமாரா...

உலகத்து அனைத்து தமிழ் மக்கள் சார்பாக.....
உன் பெற்றோருக்கும், உறவுகளுக்கும் ஆழ்ந்த அநுதாபங்களும்..
எங்கள் கண்ணீர் அஞ்சலிகளும், ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளும்.

Thursday, January 22, 2009

இரங்கி வா கடவுளே இரங்கி வா...




ஆண்டவா இங்க பார் ஐயா...
அழும் குரல்களின் அவலங்கள் கேட்கலையா..
அநியாயமாக இழக்கின்றோம் பார் ஐயா..
சொந்தங்கள் செத்து மடிவது உனக்கு தெரியலையா..

யாரிடம் போவோம் சொல்லய்யா..
படுத்துறங்கும் வேளையிலும்
செல் போட்டு தாக்குவது உனக்குத் தெரியலையா..
சொல்லய்யா பதில் சொல்லய்யா..

நீ நடந்த வீதி எங்கும் தீ வந்து எரிகிறதே..
பாதி தூரம் பாதுகாப்பு என்று செல்லும் போது..
பகைவர் வீசிய குண்டினால் பாதிஉயிர் போய் துடிக்குதய்யா..
பார்த்துக்கொண்டு இருக்க உனக்கென்ன கல் மனசா தெய்வமே...


பால் குடி ஈரம் காயாத பச்சக்குழந்தைகள் கூட
பாதகன் போட்ட குண்டுகளுக்கு பலியாகிறதே...
பார்த்துக்கொண்டு இருக்காதே இறைவா..
இருகரம் உயர்த்திக் கும்புடுகிறேன்..

இரங்கி வா கடவுளே இரங்கி வா...
தப்பேதும் செய்யாத தமிழர்களை தண்டிக்காதே..
வளரும் காலத்தில் மலராமல் மடிந்து போகும் தமிழை..
வந்தே நீயும் காத்திடு...பகைவன் கொலை வெறியை தடுத்து நிறுத்திடு.

Friday, January 16, 2009

நம்பிக்கை வைப்போம்..


காற்றே நீயும் சேதி போய்
சொல்லாயோ...
கடலலையே நீயும் மௌனமாய்
கரைவந்துசேர்வாயோ...

நாட்டுப்பிரச்சனையால்
நாளும் மக்கள் படும் துன்பம்
நாளையாவது குறையாதோ..

கோழையாய் வாழாமல் இருக்க
நாளைய சமுதாயம் சரித்திரம்
படைத்திடுமோ..

புத்தகம் தூக்கும் பையிலே
மாற்றிக்க உடுப்பு மட்டும்
இருக்கும் நிலைதான் மாறுமா..?

வானமும் நமக்கு இன்று சொந்தம்
வாழ்வில் கிடைத்திடுமே
வசந்தமும் என்றும்..

அல்லறும் தமிழினம் இனி
அலையவேண்டியதில்லை..
அகதி என்ற சொல்லுக்கு அவசியமுமில்லை.

சொல்லொண்ணாத் துயரங்கள்
சேர்ந்தது போதும்..
சொந்தங்கள் வேறிடம் இருந்தாலும்.
பற்றிடம் அங்கே வைத்தே தீரும்..

காற்றே நீயும் இச் சேதி
கொண்டு செல்வாயோ..
கடலலையே நீயும் கவலை
இன்றி எம்மக்கள் உறங்க
மௌனமாய் கரைவந்துசேராயோ
..

2007 ..மார்கழி 2 ல்...வன்கூவர் மாநகரில் நடைபெற்ற மாவீரர்

(2007 ..மார்கழி 2 ல்...வன்கூவர் மாநகரில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வின் போது என்னால் வாசிக்கப்பட்டது.)

இச் சபையில் வருகை தந்திருக்கும் அனைத்துப் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும், மறைந்த வீரர்களுக்கும், எனக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய தமிழ் நெஞ்சங்களுக்கும், என் இறைவணக்க ஆசியோடு அன்பான மாலை வணக்கங்கள்.

உங்கள் முன் என் சிற்றறிவுக்கு ஏற்ப மாவீரர் கவிதை.

வணக்கம்.


அமைதி எமக்கருள வேண்டி
அஞ்சா நெஞ்சமதாய் நின்ற
எமதருமை சகோதரர்களான மா வீரர்களே....
ஆராத்துயரில் எமை ஆற்றிப்போனதென்ன..?
ஆரறிவார் எம்மினம் படும் வேதனைகளை..?

நஞ்சுக் குப்பியை மாலையாக்கி
காலமெல்லாம், காட்டை வீடாக்கி..
கல்லும் முள்ளும் உன் உடன்பிறப்பாக்கி..
காற்றும் மழையும் உன்உற்ற தோழனாக்கி..

பாம்பும், பலினக் கொடுமை விலங்கும் உன்
பாதத்தில் பணிவிடைசெய்யும் உறவாக்கி
பகலும் இரவும் பசிமறந்து ருசி அற்று
பழக்கப்பட்ட தொன்றாக்கி
நாற்றிசையும் கண்கள் சுழற தேசத்திற்காய்

உங்கள் வாசனைகள் துறந்த எம் வீரமைந்தர்களே..
நாளெல்லாம் ஈழம் காக்க
அண்ணன் வழி நன்றே சென்றே
தமிஈழம் காண விழி திறந்து துயில் கொண்டீரோ...

ஆண்டாண்டு காலம் அவஸ்தைகள் பட்டது போதும் என்று
எதிர் கொண்ட பகையை விரட்டியடித்து
எதிர் வரும் காலம் எமதாகும்
என்றே கூறி நன்றே மண்முத்தமிட்டு உயிர் துறந்தீரோ..

தமிழன்னை அவள் ஈன்றெடுத்தாள் உன்னை
தமிஈழம் ஈன்றெடுக்க அர்பணித்தாய் உயிரை..
மண்ணுக்குள் நீங்கள் புதைக்கப்படவில்லை..தோழர்களே..
தமிழ் மண்ணில் விதைக்கப்பட்ட வித்துக்கள் தான் தாங்கள்.

எதிர் கொள்ளா நிலையை நயவஞ்சகமாக்கி
தோல்விதனை கவ்வி ஓட்டம் பிடித்த ஓநாய்கள்..
நேர் எதிர்கொள்ள துணிவில்லை..
வான் தொல்லை குண்டு போட்டு
தொலை தூரத்தே நின்றுதாக்கி உங்களோடு
அப்பாவித் தமிழர்களையும் கொன்றழித்தனரே...


கல்லறைகள் கட்டி நாம் உங்களைக் காக்கவில்லை..
அனுதினமும் பூக்கள் கொண்டு பூஜிக்கவில்லை.
நெஞ்சாற நேசிக்கின்றோம் உள்ளத்தில் வைத்து பூஜிக்கின்றோம்..
உங்களைப்போல் ஓர் பிறவி
மறு பிறவியிலாவது பெற்றிட ஆசைப்படுகின்றோம்..

நெஞ்சறையில் தித்தமும் தாங்கி
குருதியால் தோய்ந்த ஈரத் தமிழ் மண் மீட்க
நெஞ்சுருக ஈழம் காக்க வேண்டிநிற்கின்றோம்.
நெடுநாள் ஆசையிது...நிறைவேற வேண்டிநிற்கின்றோம்.

ஆண்டவா யாரறிவார் எம்சோகம்..?

போருக்குப்போய் மாய்ந்தீர் மாவீரர்களே..
பொறுத்திருக்கின்றோம் மனதைத்தேற்றி...
ஆனால்....

அடுத்தடுத்தாய் இன்னல்கள் இமைமூடி இமைக்கமுதல்
கண்ணெதிரே தாக்குதல்கள்..
பாரினில் பாரிய குண்டுகள்போட்டு
படுத்த படுக்கையில் வெட்டிச்சாய்த்து..

வெள்ளை உள்ளங்கள் வெந்நிறத்தில்
பள்ளிக்கூடம் செல்ல
செங்குருதி தோய்ந்த நிலையில்
உடல்கள சிதறி அங்கங்கள் சிதறுண்டு போகவைத்ததும்...
அயராது உழைத்த தமிழ்ஆண்மகன்
அகப்பட்டால் போதுமே அவனுக்கு

கொட்டியா எனக் முத்திரை குத்தி
கையில் துப்பாக்கி திணித்து
வீண் பழி சுமத்தி புகைப்படமும் எடுத்து
பொன்னான தமிழனை புண்ணாக்கி சாகடித்து

அக்கா, என்ன தங்கை என்ன அம்மா கூட
போதுமென்று அவனவன் இஷ்டதிற்கு
காட்டுமிராண்டித்தனமாக வெறித்தனங்களை
காட்டி கும்மாளம் போட்டும்

நாட்டில் இன்னும் காவல் என்று பொய்யுரைத்து
காவல் காக்கும் அந்த அசுரர்கள் வதையில்
சிக்குண்டு சிதறுண்டு போன இத்தனை
தியாக தீபங்களும் மாவீரர்கள்தான்.
போருக்குப்போகாவிடினும் தமிழுக்காய்
உயிர் நீத்த அத்தனை உயிர்களும்
எம் மண்ணின் மாவீரர்கள்தான்.

தமிழ் படும் பாட்டை
குண்டு போட்டு தாக்கும் நாட்டை
கண்டவரும் உண்டு, கேட்டவரும் உண்டு
அதில் கொன்று குவிக்கப்பட்டவருமுண்டு.

என்று தணியும் இப்போர்...?
என்றாவது மலரும் தமிழீழம்.
அன்று நமக்குச் சுதந்திரம்
அண்ணனோடு நாமும் பெற்றிடுவோம் தமிழ்அவதாரம்.

விழ விழ எழுந்திருப்போம்..
விடியும் அந்நாள் காத்திருப்போம்.
தளராது, ஓயாது அடுத்த சந்ததியினருக்காக
உலகெங்கும் தமிழ் ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்.

வாழ்க மாவீரர்களே..
உங்களின், எங்களின் இலட்சியக்
கொள்கை அது ஒன்றே என்றும்.

வெல்வோம் வெகு சீக்கிரத்தில்.

வாழ்க தமிழ்!!!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.!