http://photos.tamilwin.info/GalleryThumbnails.aspx?gallery=175756&page=1
மனிதப்பிறவி எடுத்ததிற்கோர்..
மாதவம் வேண்டுமென்பர்..
மனிதனை மனித மிருகம்
இல்லை இல்லை
மிருகத்தனத்தைவிட வேறு
எது கொடியதோ..
அந்தக் கொடியத்தனம் மிகுந்த..
இரத்த வெறி பிடித்தலைந்த அந்த..
காட்டுமிராண்டித்தனம்..
கொண்ட கயவர்களின்..அட்டூழியங்களை..
இத்தனையும்..
காட்சிகளாகக் காணத்தான்
மனிதப்பிறவியா..?
இன்று எம்மக்கள்
பட்ட துன்பம்..படுகின்ற துயரம்..
இத்தனையும் கண்டும் கண்கள் இறந்தும்
இறக்கவில்லை..
மனம் கலங்கியும்..
கல்லாகவில்லை..
காலம் தான் மாறுமோ..
எம்மக்களின் பாதைதான் மாறாதோ..
இந்நிலைதான் முடியாதோ..இறைவா.
இருகரம் கூப்பி இன்னும் உன்னை நம்பி..
இருவிழி அழுது கேட்கிறேன்..
போதும் இந்நிலை..போதும்..போதும்..
தமிழரைக் காக்க கருணையுள்ளம் கொண்டு..
தரையிறங்கி வருவாயா..?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment