Thursday, January 29, 2009

தியாகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்.


ஈழத் தமிழருக்காய்
உன் உயிரை மாய்த்த
சகோதரனே...
உன் துணிச்சலான வீரச்செயலை
நினைத்து கண்ணீரோடு பெருமைப்படுகின்றோம்..


உன்னைப்பெற்றவளும் தமிழன்னை..
அந்த தொப்புக்குள்கொடி உறவை நீ
உலகிற்கிற்கு உணர்த்திச் சென்றுள்ளாய்..
இன்னுமொரு தியாகத்தீபம் திலீபனை
உன் வடிவில் காண்கின்றோம்..முத்துக்குமாரா..
உன் இறப்பு..
ஈழத் தமிழருக்காக குரல் கொடுப்போரைவிடுத்து..
கண்டும் காணாதது போல இருக்கும்....
அரசியல் வாதிகளுக்கு வேண்டுமானால்
மிகச் சாதாரணமாகயிருக்கலாம்..


உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழருக்கும்..
உன் இழப்பால் இன்னும் அதிகமான தமிழர்களை
இழந்த உணர்வுதான். என்றோ ஒரு நாள் சரித்திரம்...
சொல்லும் என்றில்லை. இன்றே உன் சரித்திரம்..
உலகத்து தமிழ் மக்கள் மத்தியில் படைக்கப்படுகின்றது..


நீ காட்டிய வழியை ஏற்று இனியும் எந்த உறவும்...
தீயில் கருகி உடலை மாய்க்க வேண்டாம்..
உன் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் வாழவேண்டும்..
அதுவே அனைத்து அரசாங்கத்தையும் விழிக்கச்செய்யும்.
ஒரு தீக்குச்சியால் உன் உடலை மாய்த்துக்கொண்டாய்..
ஒரு பேனாவால் பல உயிர்களை இனங்காட்டிக்கொடுத்தாய்..
நீ கொழுத்தியது உன் உடலை அல்ல
பல முகமூடி மனிதர்களையும் சேர்த்துக் கொழுத்திவிட்டாய்..
திருந்துவார்களா திரும்பிப் பார்ப்பார்களா...
இருந்தும் உன் இறப்பின் பின்னால்
இன்னும் நாமும் உயிரோடுதான்...
இருக்கும் வரை உரிமைக்காப் போராடுவோம்..
வாழ்க முத்துக்குமாரா...

உலகத்து அனைத்து தமிழ் மக்கள் சார்பாக.....
உன் பெற்றோருக்கும், உறவுகளுக்கும் ஆழ்ந்த அநுதாபங்களும்..
எங்கள் கண்ணீர் அஞ்சலிகளும், ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளும்.