Wednesday, April 29, 2009
தியாகத் தீபமே..மெழுகாய் உருகாதே..
நித்திய தீர்வு பெற..
சத்தியம் செய்து..
பட்டினி கிடந்து
உத்தமன் உன் உயிரை
பணயம் வைத்து
இன்று எத்தனை நாளாகிற்று..?
எவராவது கேட்டார்களா..?
இன்னும் இருட்டறைக்குள் உலக வல்லரசுகள்..
இது வரையில் யாருமே கண்டு கொள்ளவில்லையே
எங்கேஉன்னை இழந்துவிடப்போகிறோமோ என
எத்தனை இலட்சக்கணக்கான தமிழர்கள்...
அத்தனை மக்களும் உன்னை இழக்கவிரும்பவில்லை..
தீலிபன் அண்ணா இறந்த துயர் இன்னும் மறக்கவில்லை..
மேலும் துயரை தந்திடாதே பரமேஸ்வரா..
எழுந்து நீயும் நடைபோடு..
துணிந்து நீயும் போராடு..
மடிந்து போகும் எம்மினத்தைக்காக்க..
மடிந்து நீயும் போவதால்..
தீர்ந்து போகும் பிரச்சனையல்ல..இது..
எழுந்து நீயும் வரவேண்டும்..
கண்ணீரோடு நாமிருக்கிறோம்..
தண்ணீர் அருந்திவிடு..
தமிழீழம் நெருங்கும் நேரத்தில்..
தவித்து நீயும் மடியவேண்டாம்..
எழுந்து வா சகோதரனே..
எழுந்து வா...
தியாகத் தீபமே..மெழுகாய் உருகாதே..
சுடராய் எழுந்து வா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment