
காற்றே நீயும் சேதி போய்
சொல்லாயோ...
கடலலையே நீயும் மௌனமாய்
கரைவந்துசேர்வாயோ...
நாட்டுப்பிரச்சனையால்
நாளும் மக்கள் படும் துன்பம்
நாளையாவது குறையாதோ..
கோழையாய் வாழாமல் இருக்க
நாளைய சமுதாயம் சரித்திரம்
படைத்திடுமோ..
புத்தகம் தூக்கும் பையிலே
மாற்றிக்க உடுப்பு மட்டும்
இருக்கும் நிலைதான் மாறுமா..?
வானமும் நமக்கு இன்று சொந்தம்
வாழ்வில் கிடைத்திடுமே
வசந்தமும் என்றும்..
அல்லறும் தமிழினம் இனி
அலையவேண்டியதில்லை..
அகதி என்ற சொல்லுக்கு அவசியமுமில்லை.
சொல்லொண்ணாத் துயரங்கள்
சேர்ந்தது போதும்..
சொந்தங்கள் வேறிடம் இருந்தாலும்.
பற்றிடம் அங்கே வைத்தே தீரும்..
காற்றே நீயும் இச் சேதி
கொண்டு செல்வாயோ..
கடலலையே நீயும் கவலை
இன்றி எம்மக்கள் உறங்க
மௌனமாய் கரைவந்துசேராயோ..
No comments:
Post a Comment