Wednesday, February 11, 2009

முடிவில்லா தொடர் நிலை










விட்டுத்துரத்தும் குண்டு மழைக்குள்..
பட்டுப்போன மரமாய்
பகல் இரவாக பதுங்குவதற்கு
குழியுமின்றி...

விழிகளிரண்டில்
வழிந்தோடும்
கண்ணீரை துடைக்க கரமும் இன்றி..

வாழ்வு முடிந்து விட்டது என ஏங்க..
முடிந்த இடத்தில் மீண்டும் ஓர் செல் விழ..
விழ விழ எழ முடிந்தும் முடியாதவர்களாய்..
வாழ்வின் விரக்தியில்

முடிந்து கொண்டிருக்கும்..சொந்தங்களுக்கு..
உதவிக்கரம் நீட்டும் என நம்பியிருந்த
அயல் நாடும்..
அநியாயம் இழைக்கின்றதே.