Wednesday, April 15, 2009

மனிதா..மனிதா.

மனிதா மனிதா
இனியும் அழுதல் முறையா
உதிரம் சிந்தி
கதறும் தமிழினம்..

தவிக்கும் நிலையை
கொதிக்கும் மனங்கள்
மாற்றியமைப்போம்..

தமிழினத்தின் இரத்த வாடையை
சுவாசிக்கும் பித்துப்பிடித்த
பிக்குக்கூட்ட சாதிகளுக்கு..

ஒட்டுமொத்த
புலம் வாழ் தமிழர்கள்
கட்டியெழுப்பும்..
தர்மத்திற்கு வழி கண்டு
விடைகொடுப்போம்.

மனிதா மனிதா
இனியும் அழுதால்
முறையா..?

ஏன் இந்தக்கொடுமை...???


அள்ளி அள்ளிக் கொடுத்த
கரங்கள்..இன்று..
அடுத்தவன் கஞ்சிக்கு
அகதிகளாய் அநாதைகளாய்..
காணும் காட்சி..
கண்களில் கசிகிறதே..

பிஞ்சு நெஞ்சங்கள்
கொதிக்கும் மணலில்
தவிக்கும் தவிப்புக்கூட
ஆதிக்கம் செலுத்துபவன்
கண்ணுக்கு விருந்தாகயிருக்கின்றதே..

மனிதநேயம் மறைந்து விட்டதா..?
தமிழினம் படும் நிலை
கண்டும் காணாதது போல
கண்மூடித்தனமாக இன்னும்
அயல் நாட்டார் தூங்குவது போல்
நடிப்பதும் ஏனோ..???

வீதியிலே உறங்கவும்
பாதியிலே வாழ்வை
முடிக்கவும் தானா..
இவர்கள் தலைவிதி..?
நாதியற்றுப் போயிருக்கும்
உறவுகளை காப்பாற்ற
நல்ல மனம் ஒன்றாவது உதவுமா..?