Thursday, January 22, 2009

இரங்கி வா கடவுளே இரங்கி வா...




ஆண்டவா இங்க பார் ஐயா...
அழும் குரல்களின் அவலங்கள் கேட்கலையா..
அநியாயமாக இழக்கின்றோம் பார் ஐயா..
சொந்தங்கள் செத்து மடிவது உனக்கு தெரியலையா..

யாரிடம் போவோம் சொல்லய்யா..
படுத்துறங்கும் வேளையிலும்
செல் போட்டு தாக்குவது உனக்குத் தெரியலையா..
சொல்லய்யா பதில் சொல்லய்யா..

நீ நடந்த வீதி எங்கும் தீ வந்து எரிகிறதே..
பாதி தூரம் பாதுகாப்பு என்று செல்லும் போது..
பகைவர் வீசிய குண்டினால் பாதிஉயிர் போய் துடிக்குதய்யா..
பார்த்துக்கொண்டு இருக்க உனக்கென்ன கல் மனசா தெய்வமே...


பால் குடி ஈரம் காயாத பச்சக்குழந்தைகள் கூட
பாதகன் போட்ட குண்டுகளுக்கு பலியாகிறதே...
பார்த்துக்கொண்டு இருக்காதே இறைவா..
இருகரம் உயர்த்திக் கும்புடுகிறேன்..

இரங்கி வா கடவுளே இரங்கி வா...
தப்பேதும் செய்யாத தமிழர்களை தண்டிக்காதே..
வளரும் காலத்தில் மலராமல் மடிந்து போகும் தமிழை..
வந்தே நீயும் காத்திடு...பகைவன் கொலை வெறியை தடுத்து நிறுத்திடு.