Tuesday, March 17, 2009

ஆழ்ந்த அநுதாபங்கள்..‏(குமாரவிநாயகம்.)


உருவத்தில் சிறியவராய்..
உள்ளத்தில் மிகப் பெரியவராய்..
வாழ்ந்த தேசப்பற்றாளர்
அமரர் தி: குமாரநாயகம் அவர்களுக்கு..

வாழ்த்துரை வடிக்க
வரம் வேண்டும்
என நினைக்க..

நிரந்தரமாய் நீ வரம் கேட்டு
நின்மதியாய் போனதென்ன..?

நீளும் எம்மின அழிவை
நினைந்தே நீயூம்..
தாங்காத துயரத்தில்..
நோய் வந்து வாட்டி..
விண்ணுலகம் போனாயோ..

அமைதியின் சொரூபமாய்..
அணையாத ஜோதியாய்..
அனைத்து தமிழ் நிகழ்விலும்..
சுடராய் ஒளி தந்தவரே..

இன்று எம்மை
இருளாக்கி நீ போனதென்ன..?

மாபெரும் சபை நடுவே நீ
மனிநேயத்தோடு மக்களுக்காக தொண்டாற்றியபடியாலோ..
உன் இறப்புச் செய்தியும் மாபெரும்
மக்கள் கூட்டத்தில் வைத்தே
அறிவிக்கப்பட்டதோ...

அதிலும் ஒரு பெருமைதான்..

உயிர்பலிகொடுத்த தாயகத்து மக்களுக்காய்..
கொடி பிடித்தோம்...
அதே துயரத்தோடு உன் பிரிவுக்கும்..
வருத்ததுடன் செவி மடுத்தோம்..

இறந்தாலும் வாழும் மனிதர்களில்
குமரா நீயும் ஒருவன்..

உன்னைப்பிரிந்து
துயரத்தில் வாடும் அன்பு மகேஸ் அக்கா மற்றும்
உற்றார் உறவினர்களுக்கு
வன்கூவர் மக்கள் சார்பில்
ஆழ்ந்த அநுதாபங்களும் ஆறுதல்கள்
வேண்டி இறைபிரார்த்தனைகளும்.


(வன்கூவர் துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் 15.03.09 அன்று என்னால் வாசிக்கப்பட்டது. )

கண்ணீர் அஞ்சலி.‏




குருதி குடிக்கும் அடங்கா அசுரனின்
அதிரடித் தாக்குதலால்
ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்கள்..
அன்றாடம் தம் உயிர்களை
தணல் தெறிக்கும் எறிகணைக்
குண்டுகளுக்கு இரையாகி விடுகின்றனரே..

தினம் வதைப்பட்டு
பிணக்குவியலில்
கூடாரமிட்டு
கூச்சலிட்டு அழக்கூட முடியாத
எமமினம் அழிகப்பட்டு
அவதியுறும் நிலை மாற

எரியும் உடலின் சாம்பலில் இருந்து
மலரும் தமிழீழம் என
உறுதிகொண்டு மடியும்
அந்த அப்பாவித்தமிழர்களின்
இன்னல்கள் வெகுவிரைவில்
துடைக்கப்பட்டு..

கண்களையும் காதுகளையும்..
பொத்திக் கொண்டு
எம்மினமழிவதை தடுக்காமல்..
ஏதேதோ நொண்டிச் சாட்டுச் சொல்லும்..
அவர்களைப் போல கருணையுள்ளம் படைத்த
கடவுளே கல்லாய் நாம் வழிபட்டதனாலோ
கல் மனதாய் விழி திறக்காதிருக்கின்றாய்..?

அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட
அன்பான எம் தமிழ் உறவுகள்
அனைவருக்கும் அவர்கள் உயிர்ககளைப்பிரிந்து வாழும்..
ஒவ்வொரு உறவுகளுக்கும்
இங்கிருந்து நாம் பிரார்த்தனையும்
ஆழ்ந்த அநுதாபங்களையும்
வார்ததைகளை
மட்டும் தான் வார்க்க முடியும்.

(வன்கூவர் துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் 15.03.09 அன்று என்னால் வாசிக்கப்பட்டது.)