Monday, February 23, 2009

தீராத கொடுமை தீருமா...?





தீராத கொடுமையை

தீர்த்துவைக்க யாருமே இல்லையா


ஆயிரமாயிரம் அப்பாவிகள்

அன்றாடம் அழிகின்றனரே..

ஆண்டவா இதற்கு ஒரு தீர்ப்பில்லையா..


மெலிந்த உடலும்..

கசிந்த மனமும்..

குருதி வடியும் கண்ணீரும்..

பதுங்கு குழிகூட

பாதுகாப்பு இன்றி


வேதனையின் விளிம்பில்

வெந்து மடியும்

எம் மினம்..


மனித வாழ்க்கை இல்லாது இருந்தும்

கால் நடையாக வாழத்தனிலும்

ஒரு சுதந்திரம் கூடஇல்லையே..


எம் தமிழனப் படுகொலைகள்

உலகக் கண்களுக்கு மட்டும் ஏன்

இருளாகவே இருக்கின்றதே...


நித்திம் நித்தம் சாவை எதிர் நோக்கி

நிர்மூலமாகும் எம் மக்களுக்கு

நீதி தேவதை கண்திறக்காதோ..


தீராத கொடுமையை

தீர்த்து வைக்க யாருமே இல்லையா..?

தீயில் வெந்து துடிக்கும் அப்பாவிகளுக்கு..நல்ல

தீர்ப்பு வழங்க எவருமே வரமாட்டார்களா..?

Wednesday, February 11, 2009

முடிவில்லா தொடர் நிலை










விட்டுத்துரத்தும் குண்டு மழைக்குள்..
பட்டுப்போன மரமாய்
பகல் இரவாக பதுங்குவதற்கு
குழியுமின்றி...

விழிகளிரண்டில்
வழிந்தோடும்
கண்ணீரை துடைக்க கரமும் இன்றி..

வாழ்வு முடிந்து விட்டது என ஏங்க..
முடிந்த இடத்தில் மீண்டும் ஓர் செல் விழ..
விழ விழ எழ முடிந்தும் முடியாதவர்களாய்..
வாழ்வின் விரக்தியில்

முடிந்து கொண்டிருக்கும்..சொந்தங்களுக்கு..
உதவிக்கரம் நீட்டும் என நம்பியிருந்த
அயல் நாடும்..
அநியாயம் இழைக்கின்றதே.