Monday, November 24, 2008

திரு நாடு.



யுத்தம் ஓய்ந்து
நித்திய வாழ்வு வரவேண்டும்..

நின்மதியாய் எம் இனம்
நித்தம் மகிழ வேண்டும்..

வற்றிய வளங்கள் திரும்பப்
பெற வேண்டும்..

நாளும் நம்பிக்கையோடு
நடப்பவைகள் நலமா
வேண்டும்..
சொர்க்க பூமி இது என்று..
உலகம் சொல்ல வேண்டும்..
ஐக்கிய நாட்டு சபையினில்..
தாயக் கொடியும் ஐக்கியமாக
வேண்டும்..

புத்தம் புதிய பூமி உருவாக
வேண்டும்.
அதுவே என் தாய்த் திருநாடாக
வேண்டும்.