Thursday, November 27, 2008

வீரவணக்கம்.

தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்திற்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த எங்கள் அன்பிற்கும், மதிப்பிற்கும், உரிய மாவீரர்களையும், போராட்ட காலங்களில் கொல்லப்பட்ட பொதுமக்களையும், இந்நேரத்தில் நினைவு கூறுவதுடன்...2.11. 2007 அன்று சிங்கள வான் படைத்தாக்குதலில் வீரச்சாவடைந்த..
தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர்...பிரிகேடியர்...சு.ப. தமிழ்ச்செல்வன், லெப்டினன் கேணல்..அன்பு மணி எனப்படும் (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், மேஜர் நேதாஜி, லெப்டினன், ஆட்சி வேல், லெப்டினன், மவைக்குமரன் உட்பட அன்மையில் அநுராதபுர வெற்றிகர சமரில் தம் உயிர்களை தமிழுக்காய் அர்பணித்த 22 கரும்புலி போராளிகளுக்கும், ... என் கண்ணீர் அஞ்சலிகளும், கவிதையும் சமர்ப்பணம்.

************************************************************************************


செல்வத்திலும் செல்வனே
தமிழ் அன்னை பெற்ற
அன்புத் தமிழ்ச்செல்வனே..
உன்னைப் பிரிந்து
உலகம் கலங்குதய்யா...

மெய்யாகிவிட்ட செய்தி
பொய்யாகிப்போகாதோ என்றே
கையேந்தி இறைவனிடம் கேட்டழுதோம்
நாளாகியும் பலனில்லை நமக்கதற்கு..

நோயாகி நீ சரிந்திருந்தால்
சற்று மனம் ஆறியிருப்போம்...ஆனால்
சண்டாள கும்பல்கள் உன்னை..வீணாக
வான் குண்டுபோட்டுத் தாக்கியதை நினைத்தால்
எப்படி எம்மனம் ஆறும்..?
எப்படி ஐயா எம் மனம் ஆறும்...?



ஐயா தமிழ்ச்செல்வனே உந்தன் உடலை
மட்டும்தான் நாம் இழந்தோம்
உயிரை இழக்கவில்லை
நாம் உங்கள் உயிரை இழக்கவில்லை..


அன்புக்குத் தாயாக
அறிவுக்கு தந்தையாக
அண்ணன் வழி நடக்கும் தம்பியாக
உலக தமிழ் மக்களுக்கெல்லாம்

உன்னத மகா உத்தமனாக
உன்னைப் போற்றிப்போற்றி
உன் புன் சிரிப்பில் எம்
உள்ளம் கொள்ளை கொண்டு மகிழ்ந்தோம் செல்வனே..
இனிக் காண்போமா...அந்த
புன் சிரிப்பு செல்வமைந்தனை..?

பகைவன் கூட உன்னைப்பார்த்தே
பேசக் கற்றுக்கொண்டான்..
மழலைகூட உன்னிடம் தான்
கள்ளமில்லா வெள்ளைச்சிரிப்பை
கடன் வாங்கிக் கொண்டிருக்கும்..

ஏன் பூக்கள் கூட உன் முகம் கண்டுதான்
தம் இதழ் விரித்திருக்கும்..
வீசும், காற்றும் பேசும் மொழியும்
உன்னிடம்தான் குளிர்மையை பெற்றிருக்கும்..

என்னத்தை எடுத்துச்சொல்லி என்ன பலன்..
முன்னை நடந்ததை மறக்கமுடியவில்லை..
கன் முன்னே உன் திருமுகம் காட்சிதந்து
எம் இனத்தில் நீ கொண்ட அந்த அரசியல் ஆட்சியின்
திறமைகளை அடுக்கடுக்காய்ச் சொல்ல வார்த்தையில்லை

தமிழுக்காய் தம் தம் உயிரை
தமிழ் மண்ணுக்காக விதைத்திட்ட
தம்பிமார்கள்
அலெக்ஸ், மிகுதன், கலையரசன்,
ஆட்சிவேல், மாவைக்குமரன்..
ஆகியோர்..

தனியாக நீ செல்லத் தடையாக
துணையாக தம்பிமார் 5 வரும்
கூடவே வந்து உறுதுணையாய்
கடமையுணர்வாய் உன்னை காத்து தம்மை
மாய்த்துக்கொண்டனரே...

கூடவே பிறக்காவிட்டாலும்..
தமிழ்த்தாய் வளர்த்த சொந்தங்களை
பிரிந்து தவிக்கிறோம்...எல்லோரையும் நினைத்து
உள்ளம் கொதித்து அழுகிறோம்..

அநுராதபுரம் வெற்றி கொண்டோம்..
அதில் 22 தமிழ் செல்வங்களின்
உடல் பிரிந்தோம்..
தமக்கென எதுவும் எண்ணாது
தமிழுக்காய் தம் உயிரை வித்திட்ட
தமிழன்னை பெற்ற மக்களையும்
இந் நேரத்தில் ஐயா உன்னோடு அவர்களுக்கும்
இருகரம் கூப்பி வாழ்த்தி வீர வணக்கம் செலுத்துகிறேன்..

தோல்வியைத் தழுவிக் கொண்ட அரக்க ராணுவம்..
கோழைத்தனமாய் தன் உடல் பசிக்கு
தமிழ் இன மொழியை உணவாக்கிக்கொண்டதே...

கனவுகள் மட்டும் காணலாம் அவர்கள்..
நினைவுகளையும் நிஜங்களையும் ஆள்பவர்கள்
நாங்களாகத்தான் இருக்கமுடியும்..
கேட்டுப் பெற்று கிடைக்காது சுதந்திரம்.
போட்டுத் தாக்கி எடுப்போம் தினம் தினம்..

உள்ளம் கொதிக்க ஒன்று
மட்டும் உறுதியாகச் சொல்லுகிறேன்

புத்திகெட்ட சிங்கள நரிகளுக்கு
கத்தி கழுத்தை நெருங்கும் காலமிது...
கதறியடித்து துடித்து தஞ்சம் என
தமிழர் காலடியில் கதியாக கலங்கி
காத்திருப்பார் காப்பாற்றுங்கள் என்று..

பேச்சோடு கவிதையோடு நிறுத்திவிட
மாட்டேன்..நான்..
முச்சிருக்கும் வரைக்கும்
தமிழுக்குத் தனி ஆட்சி கிடைக்கமட்டும்
தயங்காது தலைநிமிர்ந்து செயல்படுவேன்
உங்களோடு நானும்..

அண்ணன் வழி நடப்போம்..
அவருக்கு உறுதுணையாய் நாமும் தமிழீழம்
காணும் வரை செயல்படுவோம்...

( அழுதாலும் ஆறாது எமதுள்ளம்
தீராது தமிழீழம் காணும் வரை...ஒரு போதும்
ஓயாது போராட்டமும்
ஒரு நாள் தீரும் ஈழம் கிடைக்கும்
காலம் அது வெகுதூரமில்லை

படைகள் நெருங்கியபோதும்..
பதுங்காது புலியும் பாய்ந்தே அதைக்கொள்ளும்..
தீப்பந்தம் சரிந்தாலும் தீச்சுவாலை
தலை நிமிர்ந்தே ஒளி வீசும்.
நாளைய பொழுதில் நம்பிக்கை கொண்டு
வாழ்வோம் தமிழ் தேசப்பற்றாய் ஒற்றுமையாய் நாமும்.)


தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்...

மாவீரர்களே..





அமைதி எமக்கருள வேண்டி
அஞ்சா நெஞ்சமதாய் நின்ற
எமதருமை சகோதரர்களான மா வீரர்களே....
ஆராத்துயரில் எமை ஆற்றிப்போனதென்ன..?
ஆரறிவார் எம்மினம் படும் வேதனைகளை..?

நஞ்சுக் குப்பியை மாலையாக்கி
காலமெல்லாம், காட்டை வீடாக்கி..
கல்லும் முள்ளும் உன் உடன்பிறப்பாக்கி..
காற்றும் மழையும் உன்உற்ற தோழனாக்கி..

பாம்பும், பலினக் கொடுமை விலங்கும் உன்
பாதத்தில் பணிவிடைசெய்யும் உறவாக்கி
பகலும் இரவும் பசிமறந்து ருசி அற்று
பழக்கப்பட்ட தொன்றாக்கி
நாற்றிசையும் கண்கள் சுழற தேசத்திற்காய்

உங்கள் வாசனைகள் துறந்த எம் வீரமைந்தர்களே..
நாளெல்லாம் ஈழம் காக்க
அண்ணன் வழி நன்றே சென்றே
தமிஈழம் காண விழி திறந்து துயில் கொண்டீரோ...



ஆண்டாண்டு காலம் அவஸ்தைகள் பட்டது போதும் என்று
எதிர் கொண்ட பகையை விரட்டியடித்து
எதிர் வரும் காலம் எமதாகும்
என்றே கூறி நன்றே மண்முத்தமிட்டு உயிர் துறந்தீரோ..

தமிழன்னை அவள் ஈன்றெடுத்தாள் உன்னை
தமிஈழம் ஈன்றெடுக்க அர்பணித்தாய் உயிரை..
மண்ணுக்குள் நீங்கள் புதைக்கப்படவில்லை..தோழர்களே..
தமிழ் மண்ணில் விதைக்கப்பட்ட வித்துக்கள் தான் தாங்கள்.

எதிர் கொள்ளா நிலையை நயவஞ்சகமாக்கி
தோல்விதனை கவ்வி ஓட்டம் பிடித்த ஓநாய்கள்..
நேர் எதிர்கொள்ள துணிவில்லை..
வான் தொல்லை குண்டு போட்டு
தொலை தூரத்தே நின்றுதாக்கி உங்களோடு
அப்பாவித் தமிழர்களையும் கொன்றழித்தனரே...


கல்லறைகள் கட்டி நாம் உங்களைக் காக்கவில்லை..
அனுதினமும் பூக்கள் கொண்டு பூஜிக்கவில்லை.
நெஞ்சாற நேசிக்கின்றோம் உள்ளத்தில் வைத்து பூஜிக்கின்றோம்..
உங்களைப்போல் ஓர் பிறவி
மறு பிறவியிலாவது பெற்றிட ஆசைப்படுகின்றோம்..

நெஞ்சறையில் தித்தமும் தாங்கி
குருதியால் தோய்ந்த ஈரத் தமிழ் மண் மீட்க
நெஞ்சுருக ஈழம் காக்க வேண்டிநிற்கின்றோம்.
நெடுநாள் ஆசையிது...நிறைவேற வேண்டிநிற்கின்றோம்.

ஆண்டவா யாரறிவார் எம்சோகம்..? ..


போருக்குப்போய் மாய்ந்தீர் மாவீரர்களே..
பொறுத்திருக்கின்றோம் மனதைத்தேற்றி...
ஆனால்....

அடுத்தடுத்தாய் இன்னல்கள் இமைமூடி இமைக்கமுதல்
கண்ணெதிரே தாக்குதல்கள்..
பாரினில் பாரிய குண்டுகள்போட்டு
படுத்த படுக்கையில் வெட்டிச்சாய்த்து..

வெள்ளை உள்ளங்கள் வெந்நிறத்தில்
பள்ளிக்கூடம் செல்ல
செங்குருதி தோய்ந்த நிலையில்
உடல்கள சிதறி அங்கங்கள் சிதறுண்டு போகவைத்ததும்...
அயராது உழைத்த தமிழ்ஆண்மகன்
அகப்பட்டால் போதுமே அவனுக்கு

கொட்டியா எனக் முத்திரை குத்தி
கையில் துப்பாக்கி திணித்து
வீண் பழி சுமத்தி புகைப்படமும் எடுத்து
பொன்னான தமிழனை புண்ணாக்கி சாகடித்து

அக்கா, என்ன தங்கை என்ன அம்மா கூட
போதுமென்று அவனவன் இஷ்டதிற்கு
காட்டுமிராண்டித்தனமாக வெறித்தனங்களை
காட்டி கும்மாளம் போட்டும்

நாட்டில் இன்னும் காவல் என்று பொயுரைத்து
காவல் காக்கும் அந்த அசுரர்கள் வதையில்
சிக்குண்டு சிதறுண்டு போன இத்தனை
தியாக தீபங்களும் மாவீரர்கள்தான்.


போருக்குப்போகாவிடினும் தமிழுக்காய்
உயிர் நீத்த அத்தனை உயிர்களும்
எம் மண்ணின் மாவீரர்கள்தான்.


தமிழ் படும் பாட்டை
குண்டு போட்டு தாக்கும் நாட்டை
கண்டவரும் உண்டு, கேட்டவரும் உண்டு
அதில் கொன்று குவிக்கப்பட்டவருமுண்டு.

என்று தணியும் இப்போர்...?
என்றாவது மலரும் தமிழீழம்.
அன்று நமக்குச் சுதந்திரம்
அண்ணனோடு நாமும் பெற்றிடுவோம் தமிழ்அவதாரம்.

விழ விழ எழுந்திருப்போம்..
விடியும் அந்நாள் காத்திருப்போம்.
தளராது, ஓயாது அடுத்த சந்ததியினருக்காக
உலகெங்கும் தமிழ் ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்.

வாழ்க மாவீரர்களே..
உங்களின், எங்களின் இலட்சியக்
கொள்கை அது ஒன்றே என்றும்.

வெல்வோம் வெகு சீக்கிரத்தில்.

வாழ்க தமிழ்!!!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.!


Monday, November 24, 2008

திரு நாடு.



யுத்தம் ஓய்ந்து
நித்திய வாழ்வு வரவேண்டும்..

நின்மதியாய் எம் இனம்
நித்தம் மகிழ வேண்டும்..

வற்றிய வளங்கள் திரும்பப்
பெற வேண்டும்..

நாளும் நம்பிக்கையோடு
நடப்பவைகள் நலமா
வேண்டும்..
சொர்க்க பூமி இது என்று..
உலகம் சொல்ல வேண்டும்..
ஐக்கிய நாட்டு சபையினில்..
தாயக் கொடியும் ஐக்கியமாக
வேண்டும்..

புத்தம் புதிய பூமி உருவாக
வேண்டும்.
அதுவே என் தாய்த் திருநாடாக
வேண்டும்.